Skip to main content

Posts

காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்

Recent posts

இடப்பங்கீடா.. இட ஒதுக்கீடா.. எது சமூக நீதி?

  சமூக நீதி என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல இந்தியாவில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல. அது, “Social justice” என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அரசியல் பொருளாதார சொல்லாடலாக இருக்கக்கூடிய இந்த “Social justice” என்கிற சொல்லை அமெரிக்கத் தத்துவவியலாளர் ஜான் ராவல்ஸ் (John Rawls) என்பவரோடு தான் உலகம் தொடர்புபடுத்துகிறது. அவர் 1971 இல் தனது கோட்பாடு ஒன்றை வெளியிட்டார். Rawls Theory என்று அறியப்படுகிற அதன் சாரம் என்பது “Distribution of Goods in a Society”. அதாவது, சமூகத்தில் உள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். கோட்பாடு ரீதியாக, உண்மையில் இதுதான் சமூக நீதி. ஆனால், தமிழ்நாட்டில் 1920களிலேயே நீதிக்கட்சியும் பெரியாரும் அந்த சமூகநீதியை தங்கள் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டனர் என்பது தான் நம் வரலாறாக இருக்கிறது. அவர்கள் சமூக நீதி என்ற சொல்லை அப்போது பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம், ஆனால் விகிதாச்சார வகுப்புவாரி  இடப்பங்கீடு உரிமையை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்கள், அவர்கள். சமூக நீதி என்ற...

காவி பயங்கரவாதம்: அச்சுறுத்தலாகும் ஆர்.எஸ்.எஸ்.

  இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் பயங்கரவாத அமைப்பு என்று கூறி 3 முறை தடை செய்யப்பட்டது. முதலில் 1948ல் கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப்பட்டபோதும், பின்னர் அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபோதும், மற்றும் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டப் போதும் தடைசெய்யப்பட்டது. இப்படியான தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு இன்று இந்தியாவில் பெரிய நகரங்கள் தொடங்கி சிறிய பட்டித்தொட்டிகள் வரை சுமார் 60,000-க்கும் மேற்பட்ட கிளைகளை பரப்பியிருக்கிறது என்றால் அது சாதாரண விடயம் அல்ல. அவர்கள் நினைத்ததை சாதிக்க சமூகத்தின் அடி வரை ஊடுருவி அர்ப்பணிப்போடு பணிச் செய்யும் ஒரு தொண்டர் படையை உருவாக்கி உள்ளனர். அதேபோல் அதிகாரத்தின் எல்லா மட்டத்திலும் இவர்களின் ஆட்கள் நிரம்பி உள்ளனர். அதிலும் உயர் மட்ட அதிகாரத்தில் இருக்கும் இவர்கள் நினைப்பதை நடத்தி தரும் உயர் சாதியினர் தான் ஆர்எஸ்எஸின் மிகப் பெரிய பலம். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் காலூன்ற முடியாதென நம்மில் பலர் பேசினாலும், நடைமுறையில் RSS தமிழ்நாட்டில் கால்பதித்து ஆழமாக வேரூன்றி வெகு நாட்களாகி விட்டது. அவர்கள் தமிழகத்தில் தாலுகா வாரியாக 1,788 கிளைகளுக்கு மேல் பரவ...

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்?

  ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் கோவை காவல்துறை  சில நூற்றாண்டுகளுக்கு முன்பு  இந்த நிலத்தை ஆண்ட அரசர்களை சடங்கு பரிகாரங்கள் போன்ற மூடநம்பிக்கைகள் வாயிலாக பார்ப்பனர்கள் கட்டுப்படுத்தினர். அதன் மூலம் தங்களின் சனாதன கருத்துகளை  நம் சமூகத்தின் வேர்வரை பரப்பி தங்களுக்கு கீழ் மற்ற அனைவரும் என்ற சாதி வருணாசிரமத்தை நிறுவினார்கள். இதன் நீட்சியாக, பள்ளி கல்வித்துறை காவல்துறை நீதித்துறைகளில் பாஜக தனக்கானவர்களை நிரப்பி எல்லோரையும் தனக்கு கீழ் கட்டுப்பட்டவர்களாக நடத்த முயற்சிக்கிறது. வடஇந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்  இந்துமத அடிப்படைவாத கருத்துக்களை சாகா பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களை கொண்டு கிருத்துவ இஸ்லாமிய மத வெறுப்பை வளர்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக வன்முறையையும் மதக்கலவரத்தையும் தூண்டிவிட்டு அவர்களை ஒடுக்க ஆதரவாக இருந்து வருகிறது. அதுபோல, தமிழகத்தில் பாஜக, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா போன்ற எண்ணற்ற கட்சிகளையும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி குண்டர்களை இணைத்துக்கொண்டு ”ராஷ்ட்ர சேவிகா சம்தி” என்கின்ற அமைப்...

அண்ணாவின் பார்வையில் மே தினம்

  “பாட்டாளி மக்களின் விடுதலை விழா மே தினம். நாடு அல்ல, அதற்கு எல்லை! பாட்டாளிகள் வாழ்வுக்காக, விடுதலைக்காக, உரிமைக்காக மே தினத்தைக் கொண்டாடுகின்றனர். நாளொன்றுக்கு 8 மணி நேரம் உழைப்பது, 8 மணி நேரம் குடும்பத்துடன் குதூகலமாக வாழ்வது, மற்ற எட்டு மணி நேரம் ஓய்வாக இருப்பது – இந்த திட்டத்தை மே தினம் எடுத்துக் கூறுகிறது” – மே நாள் குறித்து அறிஞர் அண்ணாவின் கருத்துகள் இவை. ஊதிய விகிதம் குறைவாகவும், உழைப்பு நேரம் மிகுதியாகவும் முதலாளி வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்தை சக்கைகளாய் பிழிந்தெடுத்த காலகட்டத்தில் தங்களது உள்ளக் குமுறல்களை தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள் மூலம் வெளிக்காட்டினர். தங்கள் மீது நிகழ்த்திய உழைப்புச் சுரண்டலை நிறுத்த ஒன்று கூடினர். தொழிற்சங்கங்களைக் கட்டினர். உள்ளூர் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்புகளாயின. மாநாடுகள் நிகழ்ந்தன. உலக நாடுகளுக்கிடையே போராட்டங்கள் பரவின. தொழிலாளர் சங்கங்களின் திரட்சியால் பல கட்ட போராட்டங்கள் நடந்தன. முதலாளித்துவமும், அரசும் கைக்கோர்த்து அனைத்து போராட்டங்களையும் ஒடுக்கினர். தொழிலாளர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில், அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பின் கடும்...