Skip to main content

அகில இந்திய ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி கல்வியில் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தது தந்தை பெரியார் | Thanthai Periyar Brought Education Reservation to All India OBC, SC, ST communities







இந்திய வரலாற்றிலேயே பார்ப்பனர்களையும் சேர்த்து 100% இடஒதுக்கீட்டை 14.09.1928ல் கொண்டுவந்தது நீதிக்கட்சி அரசு. அன்று முதல் வகுப்புவாரி இட ஒதுக்கீடு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த சில வாரங்களில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இரண்டு பார்ப்பனர்கள் வழக்கு தொடுக்கிறார்கள்.
1.சி.ஆர் ஸ்ரீநிவாஸ் என்ற பார்ப்பனர் எனக்கு பொறியியல் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடுக்கிறார். 2.செண்பகம் துரைராஜ் என்கிற பார்ப்பன பெண் எனக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை தாமாக முன்வந்து நடத்தியவர் அரசியலமைப்பு வரைவுக் குழுவில் இருந்த பார்ப்பனர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தப் பார்ப்பன பெண்மணி விண்ணப்ப வயதை கடந்துவிட்டார். மற்றொன்று கல்லூரிக்கு விண்ணப்பமே போடவில்லை.

இந்த வழக்கில் தான் இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

இட ஒதுக்கீடு என்பது பிரிவு 29(2)க்கு விரோதமானது என்று தீர்ப்பு அளித்தது.

இதைத் கண்டு கோபமடைந்த பெரியார் 1950 ஆகஸ்ட் 14 வகுப்புரிமை நாளாக அறிவித்து போராட அழைத்தார். மேலும் அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி 3.12.1950ல் வகுப்புரிமை மாநாட்டை திருச்சி பெரியார் மாளிகையில் கூட்டினார். பெரியாரின் அழைப்பை ஏற்று பல்வேறு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஊர்வலம் சென்றனர்.

வகுப்புரிமை கிளர்ச்சி துவக்க நாள் என்று பெரியார் துவக்கினார். சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த 07.08.1950ல் கூடத்தில் 50,000 மக்கள் கலந்துகொண்டனர் அந்த கூட்டத்தில் பெரியார் அனைத்து தரப்பு மக்களையும் போராட அழைத்தார்.

தமிழ்நாடு எங்கும் மாணவர்கள் போராட்டம், கடையடைப்பு என்று தமிழ்நாடு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். மற்றொரு பக்கம் காமராஜர், படேல் போன்றோர் நேருக்கு நிலைமையை எடுத்துக் கூறினார்கள். அம்பேத்கரும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

சட்ட திருத்த அறிமுக உரையில் நேரு இவ்வாறு குறிப்பிட்டார். "சென்னை மாகாணத்தில் நடந்த நிகழ்வுகள் நம்மைச் சட்ட திருத்தம் செய்ய வழியுறுத்துகிறது", "in Madras province" என்றார். தமிழ்நாட்டில் எதிர்ப்பை தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு 01.06.1951ல் முதல் முறையாக திருத்தப்படுகிறது. பிரிவு 15(4) என்று புதிதாய் சேர்க்கப்படுகிறது.

பிரிவு 15(4) : “சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குடிமக்கள் எவரையும் அல்லது பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரை முன்னேற்றுவதற்காக எந்தச் சிறப்பு ஏற்பாட்டையும் செய்வதிலிருந்து அரசை இந்தப் பிரிவு உள்ள எதுவும் அல்லது பிரிவு 29(2) தடுக்காது”

அதுவரை பிரிவு 16(4) வெறும் வேலை வாய்ப்பில் மட்டுமே இட ஒதுக்கீட்டு உறுதி செய்யப்பட்டது. முதல் சட்ட திருத்தத்திற்கு பின்தான் கல்வியில் இட ஒதுக்கீடு வந்தது. அதன்பின் தான் தாழ்த்தப்பட்டோருக்கும், பிறப்படுத்தப்பட்டோருக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்கள் படிக்க காரணம் பெரியார் தான்.
இதில் தி.மு.க-வின் பங்கும் அதிகம் யாராவது "திராவிடம் தான் எங்களை படிக்க வைத்ததா? மற்ற மாநிலங்களில் உள்ள மக்களை பெரியாரா படிக்க வைத்தார்? தாழ்த்தப்பட்ட மக்களை பெரியாரா படிக்க வைத்தார்?" என்று கேட்டால், ஆம்! என்று பதில் சொல்லுங்கள்.

ஆதார நூல்கள்:-
- முதல் சட்ட திருத்தம் ஏன்? எதற்காக? - தோழர் ஆசிரியர் வீரமணி
- இட ஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு - கொளத்தூர் மணி

Comments

Popular posts from this blog

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்?

  ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் கோவை காவல்துறை  சில நூற்றாண்டுகளுக்கு முன்பு  இந்த நிலத்தை ஆண்ட அரசர்களை சடங்கு பரிகாரங்கள் போன்ற மூடநம்பிக்கைகள் வாயிலாக பார்ப்பனர்கள் கட்டுப்படுத்தினர். அதன் மூலம் தங்களின் சனாதன கருத்துகளை  நம் சமூகத்தின் வேர்வரை பரப்பி தங்களுக்கு கீழ் மற்ற அனைவரும் என்ற சாதி வருணாசிரமத்தை நிறுவினார்கள். இதன் நீட்சியாக, பள்ளி கல்வித்துறை காவல்துறை நீதித்துறைகளில் பாஜக தனக்கானவர்களை நிரப்பி எல்லோரையும் தனக்கு கீழ் கட்டுப்பட்டவர்களாக நடத்த முயற்சிக்கிறது. வடஇந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்  இந்துமத அடிப்படைவாத கருத்துக்களை சாகா பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களை கொண்டு கிருத்துவ இஸ்லாமிய மத வெறுப்பை வளர்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக வன்முறையையும் மதக்கலவரத்தையும் தூண்டிவிட்டு அவர்களை ஒடுக்க ஆதரவாக இருந்து வருகிறது. அதுபோல, தமிழகத்தில் பாஜக, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா போன்ற எண்ணற்ற கட்சிகளையும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி குண்டர்களை இணைத்துக்கொண்டு ”ராஷ்ட்ர சேவிகா சம்தி” என்கின்ற அமைப்...

இடப்பங்கீடா.. இட ஒதுக்கீடா.. எது சமூக நீதி?

  சமூக நீதி என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல இந்தியாவில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல. அது, “Social justice” என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அரசியல் பொருளாதார சொல்லாடலாக இருக்கக்கூடிய இந்த “Social justice” என்கிற சொல்லை அமெரிக்கத் தத்துவவியலாளர் ஜான் ராவல்ஸ் (John Rawls) என்பவரோடு தான் உலகம் தொடர்புபடுத்துகிறது. அவர் 1971 இல் தனது கோட்பாடு ஒன்றை வெளியிட்டார். Rawls Theory என்று அறியப்படுகிற அதன் சாரம் என்பது “Distribution of Goods in a Society”. அதாவது, சமூகத்தில் உள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். கோட்பாடு ரீதியாக, உண்மையில் இதுதான் சமூக நீதி. ஆனால், தமிழ்நாட்டில் 1920களிலேயே நீதிக்கட்சியும் பெரியாரும் அந்த சமூகநீதியை தங்கள் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டனர் என்பது தான் நம் வரலாறாக இருக்கிறது. அவர்கள் சமூக நீதி என்ற சொல்லை அப்போது பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம், ஆனால் விகிதாச்சார வகுப்புவாரி  இடப்பங்கீடு உரிமையை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்கள், அவர்கள். சமூக நீதி என்ற...